Pages - Menu

Oct 4, 2006

ஒரு மாலை பொழுது

கருமேக கூட்டம்
சூழ்ந்திருக்க
செடி கொடி எல்லாம்
நின்றிருக்க

வந்ததே
தென்றல் காற்றும்
வந்ததே !
தந்ததே
புதுமண் வாசனையும்
தந்ததே !

சில்லென்ற
மழைத்துளி ஒன்று
கையில் வ ந்ததே !
பளிர் என்ற
மின்னல் ஒளியும்
கண்ணில் தெரிந்ததே !

கதிரவனின்
செங்கதிர்கள் மெல்ல
மறைந்ததே !
வெண்ணிலவும்
மேகத்திரையில்
முகத்தை ஒளித்ததே !

இது ஒரு
பகலின் முடிவா?
இல்லை, இருள்படர்
இரவின் தொடக்கமா?
இல்லை, வானிலையில்
புது மாற்றமா?

இந்த நொடிப்பொழுதை
கையில் அடக்கவா?
இல்லை, வார்த்தைகளில்
வடிவம் கொடுக்கவா?
இல்லை, என் ராகத்தில்
இசையை மீட்டவா?